Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பிரபல இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. 375 படங்களுக்குப் பணியாற்றியவர்.. திரையுலகம் இரங்கல்!
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக பிரபல இசை அமைப்பாளர் மறைந்ததை அடுத்து ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கடினமான கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் ஏராளமானவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, இந்த இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது சினிமா துறையினரை கவலையடைய செய்துள்ளது.
ரவுடிகள் தாக்குதல்.. மருத்துவமனையில் நாஞ்சில் விஜயன் அட்மிட்.. சூரியாதேவியை கைது செய்ய கோரிக்கை!

இசை அமைப்பாளர்
கடந்த சில நாட்களுக்கு முன், கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி சென்னையில் மரணமடைந்தார். இந்நிலையில் மூத்த இசை அமைப்பாளர் ராஜன், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 85. இவரும் இவர் சகோதரர் நாகேந்திராவும் இணைந்து 375 படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

வீட்டுக்கு வீடு வாசப்படி
கன்னட சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர்கள், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசை அமைத்துள்ளனர். கன்னடத்தைப் போலவே தெலுங்கிலும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர்கள், தமிழில், கே.பாலாஜி, மாலினி நடித்த எல்லோரும் வாழவேண்டும், வீட்டுக்கு வீடு வாசப்படி உள்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

கல்யாண்ஜி, ஆனந்த்ஜி
70 களில் கன்னட சினிமாவில் கொடி கட்டிப் பறந்த இவர்கள் பல முக்கியமான படங்களுக்கும் இசை அமைத்துள்ளனர். கன்னட சினிமாவின் கல்யாண்ஜி, ஆனந்த்ஜி என்று இவர்கள் அழைக்கப்பட்டு வந்தனர். நாகேந்திரா கடந்த 2000 ஆம் ஆண்டு தனது 65 வது வயதில் உயிரிழந்தார்.

உடல் நிலை மோசம்
இதையடுத்து தனது மகனுடன் இணைந்து படங்களுக்கு இசை அமைத்து வந்தார், ராஜன். முதுமை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன், அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் உடல் நிலை மிகவும் மோசமானது.

கன்னட சினிமா
மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர், பெங்களூரில் உள்ள வீட்டில் நேற்று இரவு மரணமடைந்தார். அவர் மறைவு, கன்னட சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளனது. திரையுலகினர் நேரிலும் சமூக வலைதளங்களிலும் அவர் இசை அமைத்த பாடல்களை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.