Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அந்த வீடியோவில் என்ன தவறு, உண்மையை தான் சொல்லியிருக்கிறோம்: விஷால்
சென்னை: நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை விளாசி வெளியிடப்பட்ட பிரச்சார வீடியோ குறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இருக்கும் பாண்டவர் அணி செய்த சாதனைகள் குறித்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால். அந்த வீடியோவில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை ஊழல்வாதிகளாக காட்டியிருந்தார்கள்.
அதை பார்த்த வரலட்சுமியும், ராதிகா சரத்குமாரும் விஷாலை விளாசினார்கள். இந்நிலையில் அந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார் விஷால். இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியதாவது,
நீதிமன்றம்
காவல்துறை அவ்வளவு சீக்கிரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாது. சரத்குமார் விஷயத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு நீதிமன்றமே போலீசாருக்கு உத்தரவிட்டது. நான் ஒன்றும் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வைக்கவில்லை.
வீடியோ
சும்மா ஏவி விடுறதுக்கான ஏ.வி. இல்லை. நாங்கள் உண்மையை காட்டியிருக்கிறோம். ஒருவர் தவறு செய்திருந்தால் அது யாராக இருந்தாலும் நடிகர் சங்கம் அல்லது சட்டம் மூலம் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று தான் நாங்கள் கூறினோம். ஒரு அணியாக நாங்கள் செய்ததை தெரிவிக்கும் போது அவர்கள் செய்ததை குறிப்பிடுவதில் தவறு இல்லை.
வரலட்சுமி
நடிகர் சங்கம் பிளவை நோக்கிச் சென்றால் 450 கலைஞர்களை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று நிதி திரட்ட முடியுமா?. தேர்தலால் எந்த பிளவும் ஏற்படும் என்று அர்த்தம் இல்லை. தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் மீண்டும் நடிகர் சங்க குடும்பத்திற்கு திரும்பிவிடுவோம். வரலட்சுமியின் ட்வீட்டை நான் பார்க்கவில்லை. வாக்களிக்கும்போது உறுப்பினர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை தெரிய வரும். வரலட்சுமி உள்பட அனைவருக்கும் கருத்து இருக்கலாம். ஏன், எனக்கு கூட என் நண்பர்கள் மற்றும் அவர்களின் செயல்கள் மீது அதிருப்தி இருக்கலாம். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது என்று விஷால் தெரிவித்துள்ளார்.
விளாசல்
விஷால் வெளியிட்ட வீடியோவை பார்த்த வரலட்சுமி கோபத்தில் ட்வீட் போட்டார். உங்கள் மீது வைத்திருந்த கொஞ்ச மரியாதையும் போய்விட்டது. என் வாக்கை இழந்துவிட்டீர்கள். இந்த வீடியோ மூலம் உங்களின் வளர்ப்பு தெரிகிறது. நீங்கள் இரட்டை வேடம் போடுவது மற்றும் உங்களின் பொய்கள் அனைவருக்கும் தெரியும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.