Don't Miss!
- News சினிமா சூட்டிங் போல் மாஸ்! ஆந்திராவை அலற விட்ட பவன் கல்யாண்! வேட்புமனு தாக்கலுக்கே இப்படி பில்டப்பா?
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அந்த வீடியோவில் என்ன தவறு, உண்மையை தான் சொல்லியிருக்கிறோம்: விஷால்
சென்னை: நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை விளாசி வெளியிடப்பட்ட பிரச்சார வீடியோ குறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இருக்கும் பாண்டவர் அணி செய்த சாதனைகள் குறித்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால். அந்த வீடியோவில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை ஊழல்வாதிகளாக காட்டியிருந்தார்கள்.
அதை பார்த்த வரலட்சுமியும், ராதிகா சரத்குமாரும் விஷாலை விளாசினார்கள். இந்நிலையில் அந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார் விஷால். இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியதாவது,
நீதிமன்றம்
காவல்துறை அவ்வளவு சீக்கிரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாது. சரத்குமார் விஷயத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு நீதிமன்றமே போலீசாருக்கு உத்தரவிட்டது. நான் ஒன்றும் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வைக்கவில்லை.
வீடியோ
சும்மா ஏவி விடுறதுக்கான ஏ.வி. இல்லை. நாங்கள் உண்மையை காட்டியிருக்கிறோம். ஒருவர் தவறு செய்திருந்தால் அது யாராக இருந்தாலும் நடிகர் சங்கம் அல்லது சட்டம் மூலம் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று தான் நாங்கள் கூறினோம். ஒரு அணியாக நாங்கள் செய்ததை தெரிவிக்கும் போது அவர்கள் செய்ததை குறிப்பிடுவதில் தவறு இல்லை.
வரலட்சுமி
நடிகர் சங்கம் பிளவை நோக்கிச் சென்றால் 450 கலைஞர்களை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று நிதி திரட்ட முடியுமா?. தேர்தலால் எந்த பிளவும் ஏற்படும் என்று அர்த்தம் இல்லை. தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் மீண்டும் நடிகர் சங்க குடும்பத்திற்கு திரும்பிவிடுவோம். வரலட்சுமியின் ட்வீட்டை நான் பார்க்கவில்லை. வாக்களிக்கும்போது உறுப்பினர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை தெரிய வரும். வரலட்சுமி உள்பட அனைவருக்கும் கருத்து இருக்கலாம். ஏன், எனக்கு கூட என் நண்பர்கள் மற்றும் அவர்களின் செயல்கள் மீது அதிருப்தி இருக்கலாம். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது என்று விஷால் தெரிவித்துள்ளார்.
விளாசல்
விஷால் வெளியிட்ட வீடியோவை பார்த்த வரலட்சுமி கோபத்தில் ட்வீட் போட்டார். உங்கள் மீது வைத்திருந்த கொஞ்ச மரியாதையும் போய்விட்டது. என் வாக்கை இழந்துவிட்டீர்கள். இந்த வீடியோ மூலம் உங்களின் வளர்ப்பு தெரிகிறது. நீங்கள் இரட்டை வேடம் போடுவது மற்றும் உங்களின் பொய்கள் அனைவருக்கும் தெரியும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
Actor Ajith: அஜித் பிறந்தநாளில் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்.. காத்திருக்கும் ரசிகர்கள்!