Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
யார்… மிஸ் யூஸ் பண்றா... அண்ணாச்சியிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பிரியங்கா !
சென்னை : பிக் பாஸ் வீட்டில் நாட்கள் செல்ல செல்ல வீட்டில் இருப்பவர்கள் இடையே மனகசப்பு அதிகரித்து வருகிறது.
நேற்று பிக் பாஸ் வீட்டில் அண்ணாச்சியின் தலைவர் பதவியை நிரூப் காயினை பயன்படுத்தி பறித்துக்கொண்டார்.
அண்ணாச்சியும் நிரூப்பும் இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்தே மிகவும் ஒற்றுமையாக இருந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணாச்சியின் தலைவர் பதவியை நிரூப் பறித்ததால், அவர் மீது கோவத்தில் உள்ளார் அண்ணாச்சி.
நிரூப் போட்ட ஆர்டர்... செய்ய முடியாது என்ன பண்ணுவ… கொந்தளித்த அண்ணாச்சி !
கேப்டன் டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் தலைவர் பதவிக்கான போட்டி நடைபெறும். இந்த போட்டியில், பள்ளி டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட சிபி, அபிஷேக், இமான் அண்ணாச்சி போட்டியிட்டனர். இந்த டாஸ்கில் திறமையாக விளையாடி அண்ணாச்சி பிக் பாஸ் வீட்டின் தலைவரானார். ஆனால், நிரூப், தன்னிடம் இருந்த காயினை பயன்படுத்தி தலைவர் பதவியை தட்டி பறித்தார். இதனால் பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக நிரூப் இருக்கிறார்.
புது ரூல்
பிக் பாஸ் வீட்டின் தலைவர் என்ற முறையில், தன்னிடம் இருக்கும் நாணயத்தை அபிஷேக்கிடம் கொடுப்பதாகவும், பாவ்னியின் நாணயம் பிரியங்காவிடம் கொடுக்கப்படும், அந்தந்த ஏரியாவில் அவர்களின் ஆளுமை இருக்கும் என்று புது ரூலை போடுகிறார் நிரூப். இந்த புதிய ரூலை ஹவுஸ்மெட்டுகள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் வீட்டில் பெரிய வாக்கு வாதம் ஏற்படுகிறது.
மிஸ் யூஸ் பண்ணுவாங்க
தலைவர் பதவி பறிபோனதால் ஏற்கனவே கடுப்பாக இருந்த அண்ணாச்சி, நீ உன்னுடைய பவரை அபிஷேக்கிடம் மற்றும் பிரியங்காவிடம் கொடுத்தா அவங்க மிஸ் யூஸ் பண்ணுவாங்க நீ சொல்றதை எல்லாம் கேட்க முடியாது என்று கூறுகிறார்.
ஓபி அடிச்சீங்க
அண்ணாச்சியின் பேச்சால் கடுப்பான பிரியங்கா, யார் மிஸ் யூஸ் பண்ணுவா.. நாங்களா பண்ணோம். முதலில் நீங்க இந்த வீட்டில் என்ன வேலை செய்தீங்க என்று பாருங்க, எந்த வேலை கொடுத்தாலும் ஓபி அடிச்சிட்டு வேலையே செய்யாமல் இருந்தது நீங்கதான் என்று அண்ணாச்சியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அவரை திணறித்தார் பிரியங்கா.