அந்த வேலை எவ்வளவு கஷ்டம் என்பது இப்போதான் புரிகிறது.. டிக்டாக் இலக்கியா உருக்கம்!
சென்னை: நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது இப்போதுதான் புரிகிறது என்று டிக்டாக் இலக்கியா தெரிவித்துள்ளார்.
டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. அரைகுறை உடையில் டபுள் மீனிங் டயலாக்குடன் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இதனால் சமூக வலைதளங்களில் பெரும் பிரபலம் ஆனார். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார்.

நீ சுடத்தான் வந்தீயா?
இந்நிலையில் டிக்டாக் இலக்கியா படத்திலும் நடித்து வருகிறார். துரைராஜ் இயக்கும் நீ சுடத்தான் வந்தீயா என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ளார்.

பாடல் வெளியீட்டு விழா
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பேரரசு, ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.

நிறைவேறி இருக்கிறது
இதில் பேசிய இலக்கியா இந்த மேடை தன்னுடைய கனவு மேடை என்றார். மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய கனவு என்றும் அது தற்போது நிறைவேறி இருக்கிறது என்றும் கூறியுள்ளார் இலக்கியா.

இப்போது புரிகிறது
மேலும் தனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சினிமாவில் நடிக்கும் போதுதான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது என்றும் உருக்கமாக கூறினார் டிக்டாக் இலக்கியா. டிக்டாக் இலக்கியா நடித்துள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications











