ஹாலிவுட் நடிகையுடன் காமசூத்ரா 4டி... 'ஸ்மெல்' செய்தபடி பார்க்கலாமாம்!
மும்பை: காமசூத்ரா படத்தை 3டியில் உருவாக்கி வருவது தெரிந்த செய்தி. அடுத்து இப்படத்தின் 2ம் பாகத்தை எடுக்கப் போகிறாராம் இயக்குநர் ரூபேஷ் பால். அதை 4டியில் எடுக்கிறாராம். அத்தோடு வாசனையை நுகர்ந்தபடி படத்தைப் பார்க்கலாமாம் ரசிகர்கள்.
காமசூத்ரா படத்தை ரூபேஷ் பால் தற்போது 3டியில் இயக்கி வருகிறார். காமசூத்ராவை 3டியில் உருவாக்குவது இதுவே முதல் முறையாகும்.
ஷெர்லின் சோப்ராவின் முழு நீள கவர்ச்சியில் காமசூத்ரா 3டி உருவாகி வருகிறது. படம் முழுக்க ஷெர்லினை முழுமையான கவர்ச்சியி்ல காட்டியுள்ளனராம்.

அடுத்து காமசூத்ரா 4டி
3டியில் காமசூத்ராவை உருவாக்கி வரும் ரூபேஷ், இதன் 2ம் பாகத்தையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளாராம். இப்படம் 4டியில் உருவாகுமாம்.

நுகர்ந்தபடி படம் பார்க்கலாம்
இதில் இன்னொரு விசேஷமும் இருக்கிறதாம். அதாவது படம் பார்க்கும் ரசிகர்கள் வாசனையை நுகர்ந்தபடி பார்க்கலாமாம்.

ஹாலிவுட் நடிகையுடன்
2ம் பாகத்தில் ஷெர்லின் சோப்ரா இல்லையாம். மாறாக ஹாலிவுட் நடிகை ஒருவரை நடிக்க வைக்கப் போகிறாராம் ரூபேஷ் பால்.

வலுவான கதை
இதுகுறித்து அவர் கூறுகையில், முதல் பாகத்தை விட அதன் தொடர்ச்சியான 2ம் பாகம் வலுவான கதையம்சத்துடன் கூடியதாக இருக்கும்.

ஷெர்லின் கிடையாது
2ம் பாகத்தில் ஷெர்லின் சோப்ரா இடம் பெறமாட்டார். மேலும் அவரையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எனவேதான் ஹாலிவுட் நடிகை ஒருவரை இப்படத்தில் பயன்படுத்தவுள்ளோம்.

நுகரலாம், உணரலாம்
இப்படத்தில் இன்னொரு விசேஷமும் உள்ளது. 4டி டெக்னாலஜி மூலம் நாம் வாசனையை நுகர முடியும், உணர்வுகளையும் உணர முடியும் என்றார் ரூபேஷ்.
தியேட்டரில் போலீஸைக் குவிச்சு வையுங்கப்பா.. படம் பார்க்கும்போது ஏடாகூடமாக நடந்துடப் போகுது.


Click it and Unblock the Notifications











