Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திருப்பதிக்குப் போய் புருவத்தையும் சேர்த்து மொட்டையடிச்ச மாதிரி இருக்கு இசையுலகம்! - இளையராஜா
இசையுலகில் இன்றைக்கு இசையமைப்பாளர்களே இல்லாத நிலை உருவாகிவிட்டது என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார் இளையராஜா.
நேற்று பேஸ்புக் நேரலையில் இளையராஜா பேசியதாவது:
"நான் இசையமைத்த நாற்பது வருட காலமும்... எல்லாம் நடந்து முடிந்து... 'முடிந்துவிட்டது'.
இனிமேல் முழு இசைக் கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர்களுடன் பாடி.. இசையமைத்து ஒலிப்பதிவு செய்வதென்பது.. இந்த உலகில்.. இந்தப் பேரண்டத்தில் நடக்கப் போவதில்லை! அந்த காலகட்டம் முடிந்துபோய்விட்டது!
சிரிக்கவேண்டிய விஷயம் இல்லை இது ! Musicians இல்லன்னு அர்த்தம்! Music போட்றவங்க இல்ல.. Music வாசிக்கிறவங்க இல்ல.. பாடுறவங்க இல்ல.. சும்மா ஏதோ பண்ணிட்டு இருக்கோம்... சினிமாவுல வந்து கையக் கால ஆட்டுறா மாதிரி... Fight பண்றவன் Fight'டா பண்றான்?
அது மாதிரி இங்க பாடுறவனும் பாடப்போறதில்ல. ஏன்னா Tune இல்ல. இந்த இசை எவ்வளவு உயர்ந்தது.. எத்தனை ராகங்கள்.. எத்தனை கலப்புகள்.. எவ்வளவு வாத்தியக்கருவிகள் ! வாசிக்கிற விதங்களில் எத்தனை எத்தனையான பாவங்கள் ! எத்தனை உணர்வுகள்! எத்தனை Emotions ! எல்லாம் போயிடுச்சு !
திருப்பதிக்குப் போயிட்டு மொட்டை அடிச்சுட்டு வந்தா மாதிரி இருக்குது இப்போ! புருவத்தையும் சேர்த்து மொட்டை அடிச்ச மாதிரி இப்போது இசையுலகத்தில் Musicians கிடையாது என்று ஆயிடுச்சு !"
இளையராஜா பேசிய பிறகு, அவருடன் பணியாற்றிய இசைக் கலைஞர்கள், தங்களின் இசை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.