"அவுக" மட்டும் போதும்... நம்பர் ஒன் நடிகையின் புது முடிவு
சென்னை: திருமணம் வரை சென்ற காதல் முறிந்து போனதால் மீண்டும் நடிப்பிற்கே திரும்பினார் அந்த நம்பர் நடிகை, அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக தமிழ்த் திரையுலகமே அவரை உற்சாகத்துடன் வரவேற்றது.
2 வது ரவுண்டில் நடிக்க வந்து முன்னணி நடிகையாக மாறிய அவர் சமீபகாலமாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று கூறுகின்றனர். அதாவது இதுநாள்வரை பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற பாகுபாடின்றி தனது கதாபாத்திரம் பிடித்தால் நடிக்க ஒப்புக் கொண்டுவந்தார்.

ஆனால் இனிமேல் அப்படி நடிக்கப் போவதில்லையாம் நேற்று வந்த நடிகைகள் கூட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
நாம் மட்டும் இன்னும் இரண்டாம் தர நடிகர்களுடன் ஜோடி போட்டுக் கொண்டிருக்கிறோம் இப்படியே சென்றால் கூடிய சீக்கிரம் ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டாராம்.
நடிகையின் இந்த முடிவால்தான் அந்த வளர்ந்து வரும் இசை நடிகரின் படத்தை நடிகை ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள்.
ஆக இனி நம்பர் நடிகை முன்னணி நடிகர்களுடன் மட்டும் தான் டூயட் பாடுவார்.


Click it and Unblock the Notifications