Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மாடியில் இருந்து விழுந்து நடிகை பலி: கணவர் தள்ளிவிட்டாரா?
புவனேஸ்வர்: ஒடியா நடிகை லக்ஷ்மி ப்ரியா பெஹரா என்கிற நிகிதா மாடியில் இருந்து விழுந்ததில் உயிர் இழந்தார்.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் லக்ஷ்மி ப்ரியா பெஹரா என்கிற நிகிதா. சோரி சோரி மனா சோரி, ஸ்மைல் ப்ளீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
அவர் மகாநதி விஹார் பகுதியில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு கணவர் லிபன் சாஹுவுடன் சென்றார்.
2018ம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த நாயகி
நிகிதா
நிகிதா தனது கணவருடன் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்பொழுது நிகிதா அலறும் சப்தம் கேட்டு அவரது குடும்பத்தார் ஓடி வந்து பார்த்தபோது அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். அவரின் கணவர் மாடியில் நின்று கொண்டிருந்தார். மாடியில் இருந்து விழுந்ததில் நிகிதாவின் தலையில் அடிபட்டிருந்தது.
சிகிச்சை
உடனே நிகிதாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக எஸ்.சி. பி. மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரின் உடல்நலம் மோசமானதையடுத்து மீண்டும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
போலீஸ்
நிகிதாவை அவரது கணவர் லிபன் தான் கொலை செய்துவிட்டார் என்று அவரின் தந்தை சனதன் பெஹரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நிகிதாவை அவரின் கணவரும், அவரின் பெற்றோரும் சேர்ந்து மனதளவிலும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வந்ததாக சனதன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விவாதம்
என் மகளை அவரின் கணவர் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். சம்பவத்தன்று மகளுக்கும், மருமகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பிரச்சனையை பேசித் தீர்க்க இருவரும் மாடிக்கு சென்றனர். சிறிது நேரத்தில் என் மகள் மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று நிகிதாவின் தந்தை போலீசாரிடம் தெரிவித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லிபனை கைது செய்துள்ளனர்.