Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நெஞ்சே வெடித்து விட்டது.. எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவு செய்தி அறிந்த ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கம்
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 16க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 42 ஆயிரம் பாடல்களை பாடிய கின்னஸ் சாதனையாளர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்த செய்தியை கேட்டு இந்திய திரை உலகமே கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான், தமன், ஜிப்ரான், இமான் உள்ளிட்ட ஏகப்பட்ட இசையமைப்பாளர்களும் பாடு நிலாவுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காலமானார் எஸ்.பி.பி
பாடும் நிலா பாலு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1:04 மணிக்கு இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்றார். அவரது உடல் தான் நம்மை விட்டுப் பிரிகிறதே தவிர இசையாக அவரது ஆன்மா என்றுமே நம்முடன் இருக்கும் என ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கண்ணீர் கடலில்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம் என்ற தகவல் வெளியான அடுத்த நொடியே ஒட்டுமொத்த சமூக வலைதளங்களும் கண்ணீர் கடலில் மூழ்கி உள்ளது. சல்மான் கான் முதல் மகேஷ் பாபு வரை ஏகப்பட்ட இந்திய திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
7ஆம் அறிவு
மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஷ் ஜெயராஜ், ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்து இருந்தாலும், அவரது இசையில் ஆரம்ப காலத்தில் எஸ்.பி.பி அதிகமாக. பாடல்களை பாட வில்லை. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் 7ஆம் அறிவு படத்திற்காக ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் எஸ்.பி.பி பாடிய யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடல் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்க முடியது. இரங்கல்
நெஞ்சே வெடித்து விட்டது
அதன் பின்னர், ஆர்யாவின் இரண்டாம் உலகம் படம் உள்ளிட்ட சில ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்த படங்களுக்கும் எஸ்.பி.பி பாடியுள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், கடவுளே இந்த செய்தி கேட்டு என் நெஞ்சே வெடித்து விட்டது போல் இருக்கிறது. கோடிக்கணக்கான ரசிகர்களுடன் நானும் சேர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். அவர் நமக்கு விட்டுச் சென்ற பாடல்கள் என்றுமே நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து இருக்கும் என உருக்கமாக பதிவிட்டு எஸ்.பி.பி., உடன் பணியாற்றிய புகைப்படத்தை வெளியிட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.