Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடிக்கிறார், துன்புறுத்துகிறார்.. ஓம்பூரி மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
மும்பை: பழம்பெரும் நடிகர் ஓம்பூரியின் மனைவி நந்திதா பூரி, தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
ஓம்பூரி மீதான இந்தப் புகார் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் நந்திதா இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளாராம்.
வீட்டு வன்முறை
கணவர் ஓம்பூரி தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அடிப்பதாகவும் தனது புகாரில் நந்திதா கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
20 வருட தாம்பத்யம்
ஓம்பூரியும், நந்திதாவும் 20 வருடமாக குடும்பம் நடத்தி வரும் நிலையில் இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2வது மனைவி
நந்திதா, ஓம்பூரியின் 2வது மனைவி ஆவார். அதற்கு முன்பு சீமா கபூரை மணந்திருந்தார் ஓம்பூரி.
நந்திதாவின் புத்தகம் காரணமா...?
நந்திதா சமீபத்தில் 'Unlikely Hero: The Story Of Om Puri' என்ற பெயரில் ஓம்பூரி குறித்து ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தில் ஓம்பூரியின் அனுபவங்களை விவரித்திருந்தார். ஆனால் இந்த எழுத்தை ஓம்பூரி ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்படுவாரா?
மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஓம்பூரி கைது செய்யப்படுவாரா அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.