Don't Miss!
- News ஏசி ஓடுதா? மேட்ச் நடக்குதா? 18ம் தேதி என்னாச்சு? சூப்பர் சர்ப்ரைஸ் தந்த தமிழக மின்வாரியம்..மகிழ்ச்சி
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
தெலுங்கு மக்கள் சென்டிமென்ட் முட்டாள்கள்: சிரஞ்சீவி
ஹைதராபாத்: தெலுங்கு பேசும் மக்கள் சென்டிமென்ட் முட்டாள்கள் என்று தாகூர் படத்தில் வந்த வசனம் உண்மையாகும் என்று தான் நினைக்கவில்லை என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
திரையுலகில் இருந்து அரசியலுக்கு சென்ற சிரஞ்சீவி அங்கு பிசியாக இருந்து விட்டார். இதனால் சில காலம் அவர் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் ஹீரோவாக நடித்த கைதி எண் 150 படம் ஜனவரி மாதம் வெளியானது.
விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக்கே கைதி எண் 150 ஆகும்.
சூப்பர் ஹிட்
சிரஞ்சீவி சில ஆண்டுகள் கழித்து நடிக்க வந்தபோதிலும் அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால் கைதி எண் 150 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.
சிரஞ்சீவி
சிரஞ்சீவி நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான தாகூர் படத்தில் தெலுங்கு மக்கள் சென்டிமென்ட் முட்டாள்கள் என்று ஒரு வசனம் வரும். அது உண்மையாகும் என்று தான் எதிர்பார்க்கவே இல்லை என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
ஸ்டார்
ரசிகர்கள் என்னை மீண்டும் ஸ்டாராக உணர வைத்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக நான் நடிக்காமல் இருந்தது போன்றே இல்லை. என் மீது காட்டும் அளவுக்கு அதிகமான அன்புக்கு தெலுங்கு ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்கிறார் சிரஞ்சீவி.
ரசிகர்கள்
கைதி எண் 150 படத்தை விளம்பரப்படுத்த நான் பயணம் செய்தபோது மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு அளவே இல்லை என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். கைதி எண் 150 தியேட்டர்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.