நான் பலருடன் படுக்கையை பகிர காரணம் அந்த நடிகைதான்.. ஸ்ரீரெட்டி போட்ட குண்டு
நான் பலருடன் படுக்கையை பகிர ஒரு முன்னணி நடிகை தான் காரணம் என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நான் பலருடன் படுக்கையை பகிர முன்னணி நடிகை ஒருவர் தான் காரணம் என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தன்னுடன் செக்ஸ் உறவு கொண்டதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் மீது புகார் அளித்த தமிழ் நடிகர் வாராகியை அறைய இருப்பதாக ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும் பேஸ்புக்கிலும் பல அதிரடி குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி.

யார் காரணம்?
இந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். அதில் முக்கியமாக பலருடன் தான் பாலியல் உறவு கொள்ள காரணம் யார் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னணி நடிகை
இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலருடன்
தான் படுக்கையை பகிர்ந்து கொள்ள காரணமே முன்னணியில் உள்ள நம்பர் நடிகைதான் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

நடிகையை சுற்றி
தனது காதலனுடன் தான் ஒரு பார்ட்டிக்கு சென்று இருந்ததாகவும் அந்த பார்டிக்கு நடிகையும் அவரது காதலரும் ஜோடியாக வந்திருந்தனர் என்றார் ஸ்ரீரெட்டி. அப்போது பார்ட்டியில் இருந்த ஆண்கள் எல்லாரும் நடிகையை சுற்றி சுற்றி வந்தனர்.

நடிகை ஆகலாம்
ஆண்கள் அந்த நடிகையை சுற்றி வந்தனர். என் காதலன் கூட அந்த நடிகை பற்றியே பேசிக் கொண்டிருந்தான். மேலும் ஒரு நடிகை ஆனால் இந்த அளவிற்கு புகழ் கிடைக்குமா? என்று யோசித்த நான் சரி நடிகை ஆகலாம் என்கிற முடிவுக்கு வந்தேன்.

ஆசைக்கு இணங்கினேன்
எனக்கும் இதுபோன்ற ரசிகர்கள் கூட்டம் வேண்டும் என்று ஆசைப்பட்ட நான், நடிகையாக வேண்டும் என்பதற்காக இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரிடம் வாய்ப்புக்கேட்டு அவர்களின் ஆசைக்கு இணங்கி செக்ஸ்க்கு உடன்பட்டேன். இவ்வாறு ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











