Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தலைவன் பட தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மீது ரூ 50 லட்சம் மோசடி வழக்கு!
தஞ்சாவூரை சேர்ந்த வங்கி அதிகாரி ராஜசேகரன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில், "நடிகர் பாஸ் என்ற பாஸ்கரனை வைத்து தலைவன் படத்தை எடுத்த தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் சினிமா படம் எடுப்பதாக கூறி என்னிடம் ரூ. 50 லட்சம் கடன் வாங்கினார்.
இந்த பணத்தை திருப்பி கேட்டபோது விரைவில் கொடுத்து விடுவதாக கூறினார்.
ஆனால், பணத்தை கொடுக்காமல் தற்போது கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன், " என்று குறிப்பிட்டுள்ளார்.
சித்திரை செல்வன் ஏற்கனவே ஒரு மோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவன் படம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து சிக்கலுக்குள்ளானது. படத்தின் ஹீரோவான சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் திடீரென கைது செய்யப்பட்டார். தயாரிப்பாளர் மீது அடுத்தடுத்து மோசடி வழக்குகள் பாய்ந்தன.
படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் படத்திலிருந்தே விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்!