ரூ. 20 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த நேரத்திலும் கைது?

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சமீபத்தில் பல பண மோசடி புகார்கள் எழுந்தது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அவர் மீது மீண்டும் ஒரு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த என்ஜினியர் ஒருவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் சீனிவாசன் தனக்கு 25 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறியதாகவும், அதற்கு முன்பணமாக தாம் ரூ.20 லட்சத்தையும் அவரிடம் கொடுத்ததாகவும். ஆனால் 2 ஆண்டுகளாகியும் இதுவரை அவர் தமக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பவர் ஸ்டார் சீனிவாசனை, எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











