twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ. 20 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த நேரத்திலும் கைது?

    By Mayura Akilan
    |

    Power star
    சென்னை: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது கடன் தருவதாக கூறி, பண மோசடி செய்து விட்டதாக வடமாநில என்ஜினியர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சமீபத்தில் பல பண மோசடி புகார்கள் எழுந்தது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அவர் மீது மீண்டும் ஒரு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த என்ஜினியர் ஒருவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் சீனிவாசன் தனக்கு 25 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறியதாகவும், அதற்கு முன்பணமாக தாம் ரூ.20 லட்சத்தையும் அவரிடம் கொடுத்ததாகவும். ஆனால் 2 ஆண்டுகளாகியும் இதுவரை அவர் தமக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பவர் ஸ்டார் சீனிவாசனை, எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

    English summary
    The City Police Commissioner on Tuesday received one more complaint against Power star Dr.Sreenivasan from Chattishcar state engineer to 20 lakhs cheating case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X