Don't Miss!
- News சென்னையில் 3 பேர் உயிரிழந்த பப் விபத்து.. 12 பேர் மீது வழக்குப்பதிவு.. இரவோடு இரவாக போலீஸ் அதிரடி
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'இனியா வீட்டில் திருடியது நான்தான்'... சரணடைந்தார் மாப்பிள்ளை ஷாபினின் நண்பன்!
திருவனந்தபுரம்: நடிகை இனியா வீட்டில் திருடியது தானே என்று ஒப்புக் கொண்டு ராஜன் என்பவர் போலீசில் சரணடைந்துள்ளார்.
தமிழில் பிரபல நடிகையாக உள்ளவர் இனியா. இவரது சகோதரி சுவாதிக்கும் திருவனந்தபுரம் பாற்றூரைச் சேர்ந்த ஷாபின் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்க இருந்தது.
இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு இனியா வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போனது. இதனை சுவாதிக்கு நிச்சயம் செய்யப்பட்ட ஷாபினும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொள்ளை அடித்ததாகக் கூறப்பட்டது.
இதுபற்றி திருவனந்தபுரம் கரமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணமகன் ஷாபினையும், அவரது கூட்டாளி ஷஜி என்பவரையும் கைது செய்தனர். இன்னொரு நண்பனான ராஜன் என்பவரைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜன், நேற்று திருவனந்தபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த தகவல் கரமனை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ராஜனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராஜன் என்பவர் ஷாபினின் நண்பன். இவர்கள் நால்வரும் சேர்ந்துதான் திட்டமிட்டு இந்தக் கொள்ளையை நடத்தியதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இப்போது தான் மட்டும் திருடியதாக ராஜன் கூறியுள்ளார்.
சுவாதி - ஷாபின் திருமணம் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.