Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காட்சிகளை மாற்றுவது குறித்து கமல் மட்டுமே முடிவு செய்ய முடியும்: அண்ணன் சந்திரஹாசன்
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு நேற்று வருவதாக இருந்தது. ஆனால் நீதிமன்றம் தீர்ப்பை இன்றைக்கு ஒத்தி வைத்ததுடன் இந்த விவகாரம் குறித்து கமல் தமிழக அரசுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியது.
இந்நிலையில் இது குறித்து கமலின் அண்ணனும், படத்தின் இணை தயாரிப்பாளருமான சந்திர ஹாசன் கூறுகையில்,
இந்த விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும். ஒரு வேளை தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முதலில் தியேட்டர்கள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். படத்தை ரிலீஸ் செய்ய ஏதுவாக அதில் உள்ள சில காட்சிகளை எடிட் செய்வது குறித்து நான் எதுவும் தெரிவிக்க முடியாது. அது படத்தின் இயக்குனரான கமலின் கையில் உள்ளது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் படத்தை எடுக்கவில்லை. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் திரையுலகினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.