Don't Miss!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
காட்சிகளை மாற்றுவது குறித்து கமல் மட்டுமே முடிவு செய்ய முடியும்: அண்ணன் சந்திரஹாசன்
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு நேற்று வருவதாக இருந்தது. ஆனால் நீதிமன்றம் தீர்ப்பை இன்றைக்கு ஒத்தி வைத்ததுடன் இந்த விவகாரம் குறித்து கமல் தமிழக அரசுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியது.
இந்நிலையில் இது குறித்து கமலின் அண்ணனும், படத்தின் இணை தயாரிப்பாளருமான சந்திர ஹாசன் கூறுகையில்,
இந்த விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும். ஒரு வேளை தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முதலில் தியேட்டர்கள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். படத்தை ரிலீஸ் செய்ய ஏதுவாக அதில் உள்ள சில காட்சிகளை எடிட் செய்வது குறித்து நான் எதுவும் தெரிவிக்க முடியாது. அது படத்தின் இயக்குனரான கமலின் கையில் உள்ளது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் படத்தை எடுக்கவில்லை. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் திரையுலகினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.