Don't Miss!
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
காலாவை "கவுடா" காப்பாத்திருவார்.. ரஜினியின் நம்பிக்கை!
காலா படத்திற்கு இதைவிட அதிக எதிர்ப்புகளை எதிர்பார்த்ததாகத் தெரிவித்துள்ளார் ரஜினி.
Recommended Video
சென்னை: காலா படத்தை கர்நாடகாவில் தடை செய்ய தேவகவுடா விட மாட்டார் என நடிகர் ரஜினி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நாளை மறுதினம் உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது. ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் காலா படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.
இந்நிலையில், காலா பட தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பிற்காக படக்குழு ஹைதராபாத் சென்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "காலா படத்திற்கு இதைவிட அதிக எதிர்ப்பை எதிர்பார்த்தேன். ஆனால், இது குறைவு தான். அரசியல் வேறு, சினிமா தொழில் வேறு. ஆனால் இரண்டையும் சேர்த்துப் பார்க்கிறார்கள். ஒரு படத்தில் நல்ல விஷயம் இருந்தால் நிச்சயம் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையென்றால் விட்டு விடுவார்கள்.
காவிரி விவகாரத்தில் பேசித் தீர்வு கண்டால் நல்லது. கர்நாடக முதல்வரை கமல் சந்தித்ததில் தவறில்லை. காலா படம் வெளியீடு குறித்து கர்நாடக அரசு ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன். படத்தை தடை செய்ய தேவகவுடா விட மாட்டார்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.