Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காலாவை "கவுடா" காப்பாத்திருவார்.. ரஜினியின் நம்பிக்கை!
காலா படத்திற்கு இதைவிட அதிக எதிர்ப்புகளை எதிர்பார்த்ததாகத் தெரிவித்துள்ளார் ரஜினி.
Recommended Video
சென்னை: காலா படத்தை கர்நாடகாவில் தடை செய்ய தேவகவுடா விட மாட்டார் என நடிகர் ரஜினி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நாளை மறுதினம் உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது. ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் காலா படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.
இந்நிலையில், காலா பட தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பிற்காக படக்குழு ஹைதராபாத் சென்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "காலா படத்திற்கு இதைவிட அதிக எதிர்ப்பை எதிர்பார்த்தேன். ஆனால், இது குறைவு தான். அரசியல் வேறு, சினிமா தொழில் வேறு. ஆனால் இரண்டையும் சேர்த்துப் பார்க்கிறார்கள். ஒரு படத்தில் நல்ல விஷயம் இருந்தால் நிச்சயம் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையென்றால் விட்டு விடுவார்கள்.
காவிரி விவகாரத்தில் பேசித் தீர்வு கண்டால் நல்லது. கர்நாடக முதல்வரை கமல் சந்தித்ததில் தவறில்லை. காலா படம் வெளியீடு குறித்து கர்நாடக அரசு ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன். படத்தை தடை செய்ய தேவகவுடா விட மாட்டார்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.