Don't Miss!
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தொடரும் சோகம்.. ஒரேநாளில் 3 பேர்.. தயாரிப்பாளர் இப்ராஹிம் மரணம்: ஈட்டியாய் பாயகிறது.. டிஆர் இரங்கல்!
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும் இயக்குநருமான இப்ராஹிம் உடல்நலக்குறைவால் காலமானார்.
1980 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான படம் ஒரு தலை ராகம். மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் காட்சியாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இருண்டகாலத்தை எதிர்கொண்டுள்ளது உலகம்.. தடுப்பூசி போட்ட கையோடு சூப்பர் மெசேஜ் சொன்ன அருண் விஜய்!
இந்தப் படத்தை தயாரிப்பாளர் இப்ராஹீம் தயாரித்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
வயது மூப்பு..
இந்நிலையில் இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இப்ராஹிம் இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இப்ராஹிம் இன்று காலை உயிரிழந்தார்.
ஒரு தலை ராகம்
இப்ராஹிம் மயிலாடுதுறையை அடுத்த வடகரையை சேர்ந்தவர். டி ராஜேந்தரின் ஒரு தலை ராகம் படத்தை தயாரித்ததோடு அவரோடு இணைந்து இந்தப் படத்தை இயக்கியும் இருந்தார் இப்ராஹிம்.
ஈட்டியாய் பாய்கிறது
இந்நிலையில் அவர் காலமான தகவலை அறிந்த டி ராஜேந்தர், அறிக்கை மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "1980ம் ஆண்டு வெளியான என் முதல் படமான 'ஒரு தலை ராகம்' படத்தின் தயாரிப்பாளர் திரு E.M.இப்ராஹிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
திரைத்துறையினர் அதிர்ச்சி
ஏற்கனவே இன்று ஒரே நாளில் நடிகர் பாண்டு, பாடகர் கோமகன் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அந்த அதிர்ச்சியில் இருந்து தமிழ் சினிமா மீள்வதற்குள் தயாரிப்பாளர் இப்ராஹிம் மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.