Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
‘ஒத்த செருப்பு’ ஆஸ்கருக்கு போகாட்டியும் பார்த்திபன் இப்போ ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி.. ஏன் தெரியுமா?
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு விருது வழங்கப்பட்டது.
Recommended Video
சென்னை: ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டது.
பிரபல இயக்குனரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, ஒற்றை ஆளாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக பேசப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. எனவே படத்திற்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.
சென்னையில் நடைபெற்ற 17வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்த செருப்பு படத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த நடிகர் பார்த்திபன், "ஒத்த செருப்பு படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது இந்த படத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருது இந்த படத்திற்காக நான் எடுத்த முயற்சிக்கு தக்க சன்மானம்" என்றார்.