ஏம்மா ஓவியா, இந்த கடிதம் உங்கள் கண்ணில்படவே இல்லையா?
சென்னை: ஓவியா ஆர்மிக்காரர்கள் தங்களுக்கு பிடித்த நடிகையான ஓவியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். ரசிகர்கள் ட்விட்டரில் ஓவியா ஆர்மியை துவங்கி நடத்தி வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ரசிகர்களுடன் லைவ் சாட் செய்கிறேன் என்று ட்வீட்டியிருந்தார் ஓவியா. ஆனால் சொன்னபடி செய்யவில்லை. இருப்பினும் ரசிகர்கள் அவருக்காக காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ஓவியா ஆர்மிக்காரர்கள் சேர்ந்து ஓவியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். உங்களின் அன்பை தங்களின் தேவைக்கு பயன்படுத்துபவர்களிடம் சிக்கிவிடாதீர்கள் என்று ஆர்மிக்காரர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தங்களின் தேவைக்காக உங்களின் பெயரை பயன்படுத்துபவர்களிடம் இருந்து தள்ளியே இருங்கள் என்று அந்த கடிதத்தில் எச்சரித்துள்ளனர். இந்த கடிதம் ஓவியா கண்ணில் படாதா என்று ஆவலுடன் உள்ளனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











