Don't Miss!
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ஒரே மேடையில் 1418 பேர் நடனம்... கின்னஸில் இடம் பிடித்தது தமிழர்களின் ஒயிலாட்டம்!
தமிழர்களின் ஒயிலாட்டக் கலை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான ஒயிலாட்டம் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டத்தை, சினிமா பின்னணி பாடர் வேல்முருகன் முன்னெடுத்து செல்கிறார். அந்த வகையில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் ஒயிலாட்ட நிகழ்ச்சி ஒன்றிற்கு வேல்முருகன் ஏற்பாடு செய்திருந்தார்.
சென்னையை அடுத்த திருதிருநின்றவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரே நேரத்தில் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 1418 கலைஞர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடி அசத்தினர்.
ஒரே மேடையில் 1418 பேர் ஒயிலாட்டம் ஆடியது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இதற்கான சான்றிதழை கின்னஸ் அதிகாரிகள் வழங்கினர்.
இந்த சாதனை நிகழ்வில் தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், இசையமைப்பாளர்கள் கங்கைஅமரன், ஜேம்ஸ்வசந்தன், கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் தம்பிராமையா, வேல்சிவா, பி.ஆர்.ஓ,யூனியன் தலைவர் விஜயமுரளி, கலாவேல்முருகன், சௌமியாராஜேஷ், கின்னஸ் குழு சார்பில் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.