Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரே மேடையில் 1418 பேர் நடனம்... கின்னஸில் இடம் பிடித்தது தமிழர்களின் ஒயிலாட்டம்!
தமிழர்களின் ஒயிலாட்டக் கலை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான ஒயிலாட்டம் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டத்தை, சினிமா பின்னணி பாடர் வேல்முருகன் முன்னெடுத்து செல்கிறார். அந்த வகையில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் ஒயிலாட்ட நிகழ்ச்சி ஒன்றிற்கு வேல்முருகன் ஏற்பாடு செய்திருந்தார்.
சென்னையை அடுத்த திருதிருநின்றவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரே நேரத்தில் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 1418 கலைஞர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடி அசத்தினர்.
ஒரே மேடையில் 1418 பேர் ஒயிலாட்டம் ஆடியது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இதற்கான சான்றிதழை கின்னஸ் அதிகாரிகள் வழங்கினர்.
இந்த சாதனை நிகழ்வில் தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், இசையமைப்பாளர்கள் கங்கைஅமரன், ஜேம்ஸ்வசந்தன், கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் தம்பிராமையா, வேல்சிவா, பி.ஆர்.ஓ,யூனியன் தலைவர் விஜயமுரளி, கலாவேல்முருகன், சௌமியாராஜேஷ், கின்னஸ் குழு சார்பில் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.