நயன்தாராவை தோழர் என்ற பா. ரஞ்சித்: வரிந்து கட்டிக் கொண்டு வந்த நெட்டிசன்ஸ்
சென்னை: இயக்குனர் பா. ரஞ்சித் நயன்தாராவை தோழர் என்று அழைத்துள்ளது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மதிவதனியாக நடித்த அறம் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் காலா இயக்குனர் பா. ரஞ்சித் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தோழர்
#அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி...#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர்&படக்குழுவினர்க்கும் #தோழர்நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் என்று ட்வீட்டியுள்ளார்.
டவுட்டு
தோழர் நயன்தாராவா தோழினு ஒரு வார்த்தை இருக்கே என்று நெட்டிசன்ஸ் கேட்கிறார்கள்.
வென்றது
அறம் வென்றது ஜாதி பேசாமல், சமுதாய பிரச்சனைகளை மட்டும் பேசி. நல்ல படம் பிற இயக்குநர் க்கும் இது பாடமாகட்டும்
நல்லக்கண்ணு
தோழர் ஜீவா, தோழர் நல்லக்கண்ணு போன்ற போராளிகள் ரஞ்சித்தை மன்னிப்பார்கள்... #Nayanthara


Click it and Unblock the Notifications











