Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஜினி பேசிய அந்த ஒரு டயலாக் போதும்…. பா. ரஞ்சித் உருக்கம்!
Recommended Video
சென்னை : கபாலி படத்தில் ரஜினி அவர்கள் பேசிய ஒரு டைலாக்கே போதும் சினிமாவிற்கு நான் வந்ததற்கான பலனை அடைந்து விட்டேன் என்று பா. ரஞ்சித் உருக்கமாக தெரிவித்துள்ளார். ரஜினியை வைத்து நான் படம் எடுப்பேன் என்று நினைத்ததே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பா.ரஞ்சித் தாயாரித்த "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு " கடந்த 6-ஆம் தேதி திரைக்கு வந்தது. அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தை வெற்றிப்படமாக்கிய ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பா.ரஞ்சித் மிகவும் உருக்கமாக பேசினார்.
"படம் எடுக்கணும், படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நான் நினைத்ததே இல்லை. காலேஜ் படிக்கும் போது, நான் சந்தித்த ஆளுமைகள் தான் என்னைப் படமெடுக்க தூண்டின. "சில்ட்ரென் ஆப் ஹெவன்'' போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். என்னை தெரிந்துகொண்டு என்னிடம் மற்றவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன்.
என் வாழ்க்கையில் நான் அனுபவித்த வலிகளை படமாக பதிவு செய்ய நினைத்தேன். நான் பீப் பிரியாணி சாப்பிடுவது நிறைய பேருக்கு பிரச்சனையாக இருந்தது. இது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமாவில் பேச வேண்டும் என்று ஆசை பட்டேன் அதை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், நான் ரஜினி சாரை வைத்து படமெடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அவர் கபாலி படத்தில் "அம்பேத்கர் கோட் போட்டதுக்கும்'' காந்தி கோட் போட்டத்துக்கும்'' பின்னாடி அரசியல் இருக்கு என்று பேசியது ஒரு டையலாக் போது, சினிமாவிற்கு நான் வந்ததிற்கான பலனை அடைந்ததாக உணர்கிறேன்.
"பரியேறும் பெருமாள்'' படம் எடுக்கும் போது மக்கள் இப்படத்தை ஏத்துப்பாங்களா என்ற பயம் இருந்துச்சு, யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரிசெல்வராஜை கட்டிப்பிடித்து பாராட்டினார்கள். அந்தப்படம் தந்த உற்சாகம் தான் "குண்டு'' படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது. இந்தப்படத்தையும் பத்திரிகையாளர்கள் கொண்டாடி விட்டார்கள். வெறும் எதிர்ப்பை மட்டும் பதிவு செய்யாமல் நல்ல விசயத்தை கொண்டு சேர்ப்பதில் பாத்திரிக்கையாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
இரண்டு படங்களுடன் மோத தயாராகும் டாணா... ஜனவரியில் ரிலீஸ்
இன்றைய கால கட்டத்தில் சினிமா ஒரு மிகப்பெரிய ஆயுதம், மக்களிடம் ஒரு விசயத்தை நேரடியாக சென்று சேர வேண்டும் என்றால் அது சினிமாவால் மட்டும் தான் முடியும். அப்படியான நல்ல கருத்துள்ள படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தந்து கொண்டிருக்கும் என்று பா.ரஞ்சித் பேசினார்.