Don't Miss!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்!
சென்னை: விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை ஒன்றை சொல்லி இருப்பதாக இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தினேஷ் நடித்த அட்டகத்தி படம் மூலம் இயக்குனரானவர், பா.இரஞ்சித். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.
இதையடுத்து கார்த்தியின் மெட்ராஸ், ரஜினியின் கபாலி, காலா படங்களை இயக்கினார்.
சார்பட்டா பரம்பரை
காலாவைத் தொடர்ந்து பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையை அவர் படமாக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர், சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கியுள்ளார். குத்துச் சண்டையை மையமாகக் கொண்ட இதன் கதை, வடசென்னையில் நடந்த உண்மைச் சம்பவம் என்று கூறப்படுகிறது.
குத்துச்சண்டை
இதில், ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். மற்றும் கலையரசன், துஷாரா, பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்காக, ஆர்யாவும் கலையரசனும் குத்துச் சண்டைப் பயிற்சி பெற்றுள்ளனர். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஏறி ஆடு கபிலா
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று சோசியல் மீடியாவில் பகிர்ந்த பா.இரஞ்சித், இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. இது நம்ப ஆட்டம். எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா என்று குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு பரம்பரை
இந்நிலையில், பா.ரஞ்சித் அளித்துள்ள பேட்டியில், விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: முன்பு வடசென்னையில் வழக்கத்தில் இருந்த ஆங்கில குத்துச்சண்டைதான் சார்பட்டா படம். இரண்டு
பரம்பரைக்குள் நடக்கும் சண்டையில் யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்கிற மோதல்தான் கதை.
தீவிரமான விளையாட்டு
வட சென்னையில் இது தீவிரமான விளையாடப்பட்டு வந்திருக்கிறது. அந்தக் கதையை முழுமையாக இதில் சொல்லிவிட முடியாது. இரண்டரை மணி நேரத்துக்குள் சொல்ல முடிந்ததை சொல்லி இருக்கிறேன். இதில் ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சூப்பர் ஹீரோ கதை
சார்பட்டாவுக்குப் பிறகு பிர்ஸா முண்டா படத்தை முடிக்க வேண்டும். காலா படம் முடிந்ததும் விஜய் சாரை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கு கதைப் பிடித்திருந்தது. சூப்பர் ஹீரோ கதை அது.. பார்க்கலாம். ரஜினியிடம் அரசியல் குறித்து பேசியிருக்கிறேன். அவருக்கு அரசியலில் ஈடுபட ஆர்வம் இருக்கிறது.