Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஒரு வழியா ரஜினி அரசியலுக்கு வர 'இவர்' தான் காரணமாமே?
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க இயக்குனர் பா. ரஞ்சித் தான் காரணம் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டாவை வைத்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்திற்கு நோட்டா என்று பெயர் வைத்துள்ளனர். படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
இந்நிலையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஞானவேல்ராஜா கூறியதாவது,
அரசியல்
ரஜினி சார் 2 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வருவார் என்று நினைத்தேன். ரஞ்சித்தின் கபாலி படத்தில் நடித்த பிறகு அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன் நடக்கவில்லை.
ரஞ்சித்
மீண்டும் ரஞ்சித்துடன் சேர்ந்து காலா படத்தில் நடித்து முடித்த பிறகு ரஜினி சார் அரசியலுக்கு வந்துள்ளார். இதுவே ரஞ்சித்தின் பலம். தன்னுடன் பழகுபவர்களுக்கு அரசியலின் முக்கியத்துவத்தை எளிதில் உணர்த்துவார் ரஞ்சித்.
பங்களிப்பு
ரஜினி சார் அரசியலுக்கு வந்துள்ளதில் ரஞ்சித்துக்கு முக்கிய பங்கு உள்ளது. தான் வாழும் சமூகம் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார் ரஞ்சித். இருமுகன் டீஸரை பார்த்தபோதே ஆனந்த் ஷங்கருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.
வசூல்
அர்ஜுன் ரெட்டி படம் ரிலீஸானவுடன் அதன் ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார்கள். பாலா சார் இயக்கிக் கொண்டிருக்கிறார். படம் ரிலீஸான 4 வாரங்களுக்குள் நகரங்கள், மல்டிபிளக்ஸுகளில் மட்டும் ரூ. 2.75 கோடி வசூல் செய்தது.
ஹீரோ
தமிழகத்தில் அர்ஜுன் ரெட்டி பட ஹீரோவின் நடிப்பை மக்கள் அவ்வளவு ரசித்தார்கள். விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாவதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அவரின் திறமைக்கு ஏற்ற தீனியாக இந்த நோட்டா படம் இருக்கும் என்றார் ஞானவேல்ராஜா.