மதமாற்றத்தை ஆசிரியர் கண்டித்ததால் ஓவியக் கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை! - பா ரஞ்சித்
Recommended Video

மதமாற்றத்தை ஆசிரியர் கண்டித்ததால் ஓவியக் கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை!- வீடியோ
சென்னை: ஓவியக் கல்லூரி மாணவர் பிரகாஷ் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ், இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் குரல் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் இன்று சத்யராஜும் பா ரஞ்சித்தும் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதமாற்றத்தை ஆசிரியர் கண்டித்ததால் சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் அக்டோபர் 25-ம் தேதி வேலூரில் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் மாணவர் தற்கொலை தொடர்பாக இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் போராடலாம். குரல் கொடுக்க, உதவிக்கு வர நாங்கள் இருக்கிறோம். மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொள்ள கூடாது.
மாணவர் பிரகாஷ் இறப்புக்கு நீதி கேட்டு வேலூரில் நவம்பர் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்," என்றனர்.
Comments


Click it and Unblock the Notifications