Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'உங்கள வெரட்டி வெளுக்கத்தான் இந்தப் போராட்டம்..' - வைரலாகும் பா.விஜய் வீடியோ!
Recommended Video
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்காக அனைவரும் கைகோர்த்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தில் திரையுலகினரும் இணைந்துள்ளனர். நேற்று முன் தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்த நடிகர்கள், இயக்குநர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நடிகரும், பாடலாசிரியருமான பா.விஜய் இந்த விவகாரம் பற்றி தனது ஸ்டைலில் கவிதை ஒன்றை எழுதி, தானே அதைப் பாடி ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக, பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய கவிதை வருமாறு...
"தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு..
மொதல்ல தரங்கெட்டுப்போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..!
சே..சேன்னு கூட்டம் மெதப்புல மெதக்கலாம் சேப்பாக்கம்..
அத செங்கல் செங்கலா எங்க கூட்டாம் தூள் தூளாக்கும்..!
கடற்கரை ஓரத்தை பூட்டி வச்சுப்புட்டியே காவலாளி..
புயல் காத்துக்கு பூட்டு போட்டவன் எவண்டா புத்திசாலி..!
ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க..
எங்க பசங்க ஒரு நாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க..!
விளம்பரத்துல தன்னையே வித்தவனை எல்லாம் வீரன்ற..
தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவன்ற..?
ஒரே இந்தியா ஒரே ரத்தமுனு கூவுறியே..
அட காவிரிக்கு மட்டும் கட்டத்த மாத்தி தாவுறியே..!
ஆவட்டும் சாரே, ஆனவரைக்கும் ஊரை ஏமாத்து..
எங்க பச்சத்தமிழனுக்கு புரிஞ்சுபோச்சு ஒம் பம்மாத்து..!
காவிரி எங்க கரிகாலனால தாண்டா ஆறாச்சு..
எங்க தொண்டைய மெறிச்சு தொண்டுனு சொல்லுற வாய் சேறாச்சு..!
காவிரில பல பேர் கால் கழுவ மட்டும்தான், கால் வச்சான்..
அப்படி வீணான தண்ணியில விவசாயத் தமிழன்தான் நெல் வச்சான்..!
பால் குடிச்ச சிசுவோட கழுத்த நெறிச்ச பேய்க்கூட்டம்..
உங்கள வெரட்டி அடிச்சு, வெளுக்கத்தாண்டா இந்தப் போராட்டம்..!
தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு..
மொதல்ல தரங்கெட்டுப்போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..!"
இவ்வாறு எழுதிப் பாடியிருக்கிறார் பா.விஜய். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
— PA.VIJAY (@poetpaavijay1) April 11, 2018