Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பத்ம விருதுகளில் புறக்கணிக்கப்பட்ட தென்னிந்திய சினிமா கலைஞர்கள்.. பிரபல தயாரிப்பாளர் அப்செட்!
சென்னை: பல துறைகளில் சாதித்த இந்தியர்களை கெளரவப்படுத்தும் விதமாக பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.
இதில், பாலிவுட் சினிமா பிரபலங்களான கங்கனா ரனாவத், கரண் ஜோஹர் மற்றும் ஏக்தா கபூர் போன்ற பிரபலங்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால், தென்னிந்திய சினிமாவை சேர்ந்த ஒரு பிரபலத்திற்கு கூட இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான பாஃப்டா தனஞ்செயன் "Royal ignore of South film industry" என ட்வீட் போட்டுள்ளார்.
Royal ignore of South film industry @crhemanth 🤔☹️ https://t.co/JW2JvJsNHw
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) January 25, 2020
ஹேமந்த் குமார் என்பவர் 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு தென்னிந்திய சினிமா துறை கலைஞர்கள் பெயரும் இடம்பெறவில்லை ஏன் என கேள்வி எழுப்பியதற்கு, பதிலளித்த தனஞ்செயன், தென்னிந்திய சினிமாவை மொத்தமாக மறந்துவிட்டனர் என பதிலளித்துள்ளார்.
பிரம்மாண்டமாக அரங்கேறியது "83" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விழா
இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளின் போதும் தமிழ் சினிமா கலைஞர்கள் பெரியளவி புறக்கணிக்கப்பட்டனர் என சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.