Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பத்ம விருதுகளில் புறக்கணிக்கப்பட்ட தென்னிந்திய சினிமா கலைஞர்கள்.. பிரபல தயாரிப்பாளர் அப்செட்!
சென்னை: பல துறைகளில் சாதித்த இந்தியர்களை கெளரவப்படுத்தும் விதமாக பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.
இதில், பாலிவுட் சினிமா பிரபலங்களான கங்கனா ரனாவத், கரண் ஜோஹர் மற்றும் ஏக்தா கபூர் போன்ற பிரபலங்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால், தென்னிந்திய சினிமாவை சேர்ந்த ஒரு பிரபலத்திற்கு கூட இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான பாஃப்டா தனஞ்செயன் "Royal ignore of South film industry" என ட்வீட் போட்டுள்ளார்.
Royal ignore of South film industry @crhemanth 🤔☹️ https://t.co/JW2JvJsNHw
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) January 25, 2020
ஹேமந்த் குமார் என்பவர் 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு தென்னிந்திய சினிமா துறை கலைஞர்கள் பெயரும் இடம்பெறவில்லை ஏன் என கேள்வி எழுப்பியதற்கு, பதிலளித்த தனஞ்செயன், தென்னிந்திய சினிமாவை மொத்தமாக மறந்துவிட்டனர் என பதிலளித்துள்ளார்.
பிரம்மாண்டமாக அரங்கேறியது "83" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விழா
இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளின் போதும் தமிழ் சினிமா கலைஞர்கள் பெரியளவி புறக்கணிக்கப்பட்டனர் என சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.