திருந்தாத ஜென்மம்: 'வி' வார்த்தையை பயன்படுத்திய நடிகையை விளாசிய பத்மாவத் எழுத்தாளர்கள்
Recommended Video

மும்பை: பத்மாவத் படத்தை பார்த்துவிட்டு 'வி' வார்த்தையை பயன்படுத்திய நடிகையை படத்தின் எழுத்தாளர்கள் விளாசியுள்ளார்கள்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்த பத்மாவத் படத்தை பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் பார்த்துள்ளார்.
படத்தை பார்த்த அவர் நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பத்மாவத்
பத்மாவத் படம் பார்த்தேன். இறுதியில் Vaginaவுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாாக ஸ்வரா தெரிவித்துள்ளார். Vaginaவை தாண்டியும் வாழ்க்கை உள்ளது என்று ஸ்வரா கூறியுள்ளார்.
நடிகை
ஸ்வரா அந்த வி வார்த்தையை பயன்படுத்தியதை பார்த்த நடிகை சுசித்ரா கிருஷ்மூர்த்தி அவரை ட்விட்டரில் விளாசியிருந்தார். அதை பார்த்த ஸ்வராவோ பதிலுக்கு அந்த வி வார்த்தையை மீண்டும் மீண்டும் மீண்டும் டைப் செய்து ட்வீட்டிவிட்டார்.

எழுத்தாளர்கள்
ஸ்வராவின் ட்வீட்டை பார்த்த பத்மாவத் எழுத்தாளர்கள் சித்தார்த்-கரிமா ஆகியோர் நீண்ட கடிதம் எழுதியுள்ளனர். அனைத்து வி...களுக்கும் என்று தலைப்பிட்டு எழுதியுள்ளனர்.

விருப்பம்
ராணி பத்மாவதி தன்னிச்சையாக தான் தன்னை தானே எரித்துக் கொண்டார். அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. கொடுமைக்காரன் அலாவுத்தீன் கில்ஜியின் கையில் சிக்காமல் இருக்க அவர் அப்படி செய்தார் என்று சித்தார்த்-கரிமா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

படம்
பத்மாவத் படத்தை பார்த்துவிட்டு வி...யாக ஃபீல் செய்தவர்கள் தொடர்ந்து அதே போன்றே ஃபீல் செய்யட்டும். பத்மாவத் படத்தில் உள்ள பவர் அவர்களுக்கு ஒருபோதும் புரியாது என்கிறார்கள் சித்தார்த்-கரிமா.


Click it and Unblock the Notifications











