Don't Miss!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வசூலில் பட்டையைக் கிளப்பும் பேட்மேன்... மூன்று நாட்களில் ரூ.40 கோடி கலெக்ஷன்!
Recommended Video
சென்னை : அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடிப்பில் பால்கி இயக்கத்தில் உருவான 'பேட் மேன்' படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழரான அருணாசலம் முருகானந்தம், குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்து சமூக ஆர்வலராகப் பங்காற்றி வருபவர். பெண்களுக்காக நாப்கின் புரட்சி செய்து 'பத்மஶ்ரீ' விருது வென்ற அருணாசலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை தான் பாலிவுட்டில் 'பேட்மேன்' (Padman) படமாகி இருக்கிறது.
மாதவிடாய் பிரச்னையின் போது பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை குறைந்த விலையில் தயாரித்து கொடுத்த தமிழரான அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு, அதில் முருகானந்தம் ரோலில் அக்ஷய் குமார் நடித்திருக்கிறார்.
இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தியா முழுக்க 2750 தியேட்டர்களில் வெளியான இப்படம் முதல்நாளில் மட்டும் ரூ.10.26 கோடி வசூலித்தது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறுகளில் வசூல் இன்னும் அதிகரிக்க மூன்றே நாளில் ரூ.40.05 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
சுமார் ரூ.70 கோடி பட்ஜெட்டில் தயாரான 'பேட்மேன்' இந்தவார முடிவில் அசலைக் கடந்து, லாபத்தைக் கொடுக்கும் என்கிறார்கள். அருணாசலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கைக் கதையை தமிழில் எடுக்க யாரும் முன்வராதபோது, பாலிவுட்டில் படமாகி லாபம் ஈட்டுவது பெரிய விஷயம் தான். இதற்கு அந்தப் படத்தின் மீதான புரொமோஷனே முக்கியக் காரணம்.