twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகனால் கொடுமைப்படுத்தப்பட்ட சீனியர் நடிகை முதியோர் இல்லத்தில் மரணம்

    By Siva
    |

    மும்பை: பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட நடிகை கீதா கபூர் முதியோர் இல்லத்தில் உயிர் இழந்தார்.

    பகீசா பாலிவுட் படம் புகழ் கீதா கபூருக்கு ராஜா என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். வயதான தாயை பார்த்துக் கொள்ள விரும்பாத மகன் ராஜா அவரை கடந்த ஆண்டு மே மாதம் மருத்துவமனையில் அனுமதித்தார்.

    மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு பணம் எடுத்து வருவதாகக் கூறி சென்ற ராஜா திரும்பி வரவே இல்லை.

    இயக்குனர்

    இயக்குனர்

    கீதா கபூரின் நிலை குறித்து அறிந்த சென்சார் போர்டு உறுப்பினர் அசோக் பண்டிட் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் தாராணி ஆகியோர் மருத்துவமனை செலவை ஏற்றதுடன் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டனர்.

    இயற்கை

    இயற்கை

    ஓராண்டு காலமாக முதியோர் இல்லத்தில் இருந்த கீதா நேற்று காலை மரணம் அடைந்தார். பிள்ளைகள் ஒரு முறையாவது வந்து தன்னை பார்க்க மாட்டார்களா என்ற ஏக்கத்திலேயே அவர் உயிர் இறந்துள்ளார்.

    பிள்ளைகள்

    பிள்ளைகள்

    கீதா கபூரின் உடல் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் வைக்கப்படுகிறது. அவரின் பிள்ளைகள் வந்து அவருக்கு இறுதிச் சடங்கு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அவரின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    கொடுமை

    கொடுமை

    கீதா கபூர் தனது மகனுடன் வசித்தபோது நான்கு நாட்களுக்கு ஒரு முறை அவருக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது. அம்மா என்று கூட பார்க்காமல் அவரை அடித்து உதைத்து அறையில் பூட்டி வைத்திருந்திருக்கிறார் ராஜா.

    English summary
    Pakeezah actress Geeta Kapoor who was abandoned by her son Raja passed away at an old age home in Mumbai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X