Don't Miss!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாகிஸ்தானில் நடிகையை சுட்டுக் கொன்ற கணவர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடிகையும், பாடகியுமான ரேஷ்மாவை அவரது கணவர் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்குவா மாகாணத்தை சேர்ந்தவர் ரேஷ்மா. பாடகியான அவர் நாடகங்களிலும் நடித்துள்ளார். ரேஷ்மா தனது சகோதரருடன் ஹகிமாபாத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அவரது கணவர் வந்து ரேஷ்மாவுடன் சண்டை போட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரேஷ்மாவை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவத்தில் ரேஷ்மா உயிர் இழந்தார். ரேஷ்மா அந்த நபரின் 4வது மனைவி ஆவார். கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து அவர் தனது சகோதரர் வீட்டில் வசிந்து வந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் கைபர் பக்துங்குவா மாகாணத்தில் 15 பெண் கலைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக மேடை நாடகத்தில் நடித்து வந்த சன்புல் கடந்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.