Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தடை நீக்கம்: நாளை முதல் பாகிஸ்தானில் இந்திய படங்கள் மீண்டும் திரையிடப்படுகிறது
கராச்சி: யூரி தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் இந்திய படங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பாகிஸ்தானில் இந்திய படங்கள் திரையிடப்பட உள்ளன.
யூரி தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவியது. யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அழித்து தீவிரவாதிகளை கொன்றது.
இந்நிலையில் இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்கள் பணியாற்ற தடை விதிப்பதாக இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானில் இந்திய படங்களை திரையிட தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்திய படங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. நாளை முதல் பாகிஸ்தானில் மீண்டும் இந்திய படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதற்கிடையே தனியார் ஊடக குழுமம் ஒன்று ஆமீர் கானின் தங்கல் படத்தை பாகிஸ்தானில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது அரசு விதித்த தடை அல்ல. மாறாக பாகிஸ்தான் திரைப்பட அதிபர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து விதித்துக் கொண்ட தடையாகும்.