பாண்டவர் அணி பொய் மட்டுமே பேசுகிறது: நடிகர் உதயா
Recommended Video
மதுரை: சுவாமி சங்கரதாஸ் அணி வென்றால் சொந்த பணத்தில் சங்க கட்டிடம் கட்டுவோம், பாண்டவர் அணி பொய்யாக மட்டுமே பேசி வருகின்றனர், பாண்டவர் அணியை நம்பி நாங்கள் ஏமாந்தோம் என நடிகர் உதயா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு ஆதரவாக மதுரையில் உள்ள நாடக நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் நடிகர் உதயா, நடிகர் விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் ஆகியோரும் ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

நடிகர் உதயா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது,
சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக போட்டியிடும் தலைவர் பாக்யராஜ் சாருக்கு ஆதரவாக இன்று மதுரை நாடக சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம். மதுரையில் உள்ள கலைஞர்களின் திறமையை கண்டு நான் வியந்து இருக்கிறேன்.
எந்தவித கலை நிகழ்ச்சியும் நடத்தாமல் 8 மாதத்துக்குள் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என தலைவர் தெரிவித்திருக்கிறார். மதுரையில் முதியோர் திட்டம் செயல்படுத்த இருக்கிறோம். அதேபோல் அரசின் திட்டம் 5 கிலோ அரிசியை வழங்க இருக்கிறோம். நடிகர்கள் மத்தியில் நலிந்த என்ற வார்த்தையே இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம்.
கருணாஸ் நிறைய சொல்லுவாங்க அது எதுவுமே உண்மை இல்லை. ரூ. 1.5 கோடி கொடுத்தது வட்டியில்லா கடன் அதை எப்படி வட்டிக்கு கொடுத்ததாக கூற முடியும். இது ஒரு கலைஞர்களின் குடும்பம். தேர்தல் என்பது போட்டி தான். அணியை சேர்ந்தவர்கள் அரசியலில் இருக்கலாம், ஆனால் அணி எப்படி அரசியலாகும். கருணாஸ் பதவி கேட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதனை தேவைப்பட்டால் வெளியிடுவேன்.

எதிர்க்கட்சி ஆளுங்கட்சி மற்ற தரப்பினர் தரப்பு நடிகர் சங்கத்தில் தலையீடு இல்லை.
நாடக கலைக்கு உரிய மரியாதை கொடுத்தே சுவாமி சங்கரதாஸ் அணியினர் என்றே பெயர் வைத்தோம். சங்க கட்டிடத்தை விஷால் மட்டும் கட்டவில்லை, எல்லா கலைஞர்களும் இணைந்தே கட்டிடடப்பணியை மேற்கொண்டார்கள். கருணாஸ் பேச்சுத்திறமை அருமை, அவர் பேச்சை கேட்டு கலைஞர்கள் மனம் மாறி விடமாட்டார்கள். பாண்டவர் அணியினர் பொய் மட்டுமே கூறுகின்றார். கருணாஸ் பதவி கேட்டார். உண்மையாய் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி என்று சொன்னதால் அவர் கோபப்பட்டு பேசி வருகிறார் என்கிறார்.


Click it and Unblock the Notifications











