நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு?
Recommended Video
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சங்கத்திற்கு தேர்தல் வரம் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை தேர்தலை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக சுவாமி சங்கர்தாஸ் அணியின் நடிகர் பாக்யராஜ் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக நடிகர் விஷால் தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பதிவாளர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர விஷால் தரப்பு ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை சங்கங்களின் பதிவாளர் நிறுத்தி வைத்துள்ளதால் தேர்தலுக்கு பாதுகாப்பு கோரும் விஷால் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











