Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு இப்படியொரு பிரச்சனை.. மோசடி செய்த நபர்களை வெளுத்து வாங்கி உள்ளார்!
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
சித்ராவை தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் தற்போது காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது பெயரில் போலியாக இயங்கி வரும் சமூக வலைதள கணக்குகள் குறித்த உண்மையை தோலுரித்துள்ளார் காவ்யா.
கூட்டுக் குடும்பம்
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஆனந்தம் படத்தின் மையக் கருவை வைத்துக் கொண்டு உருவாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் சக்கைப் போடு போட்டு வருகிறது. ஸ்டாலின், ஹேமா ராஜ்குமார், சுஜிதா, ஷீலா, குமரன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் அந்த தொடரில் நடித்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் சின்னத்திரை நடிகை ரோஷ்னி ஹரிபிரியன் லீடு ரோலில் நடித்து வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான காவ்யா அறிவுமணியை புது முல்லையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒப்பந்தம் செய்தனர். ஆரம்பத்தில் விஜே சித்ரா ரசிகர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், காவ்யா அறிவுமணியின் சிறந்த நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
செம வைரல்
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய புதிய போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறார் இந்த புது முல்லை. சேலை மற்றும் பாவாடை தாவணியில் க்யூட்டாகவும் சில சமயங்களில் மாடர்ன் உடைகளில் ஸ்டைலாகவும் போஸ் கொடுத்து அசத்துகிறார்.
டிக்டாக் தடை
விஜே சித்ரா, காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பல சீரியல் நடிகைகளும் டிக் டாக் செயலி இருந்த போது அதில் வீடியோக்களை போட்டு செம டிரெண்ட் செய்தனர். ஆனால், டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தை தற்போது ஜோஷ் செயலி ஆக்கிரமித்து வருகிறது.
ஃபேக் அக்கவுண்ட்
ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்குகள் பல உலாவி வருகின்றன. அதே போல ஜோஷ் செயலியிலும் சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணியின் பெயரில் சில ஃபேக் அக்கவுண்ட்கள் வலம் வருகின்றன.
பிளாக் பண்ணுங்க
சமூக வலைதளங்கள் மூலம் இந்த லாக்டவுன் நேரத்திலும் புதிய புதிய விளம்பர பொருட்களை விற்பனை செய்து ஏகப்பட்ட சின்னத்திரை நடிகைகள் சம்பாதித்து வருகின்றனர். அவர்கள் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி தனி பிசினஸ் செய்ய திட்டமிடும் விஷமிகளின் திட்டத்தை அறிந்து கொண்ட காவ்யா, அந்த ஐடி ஃபேக் ஐடி என்றும், அதனை உடனடியாக பிளாக் பண்ணுங்க என்றும் தனது ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.