Don't Miss!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதித்தது: பாண்டிராஜ், ஜிவி கோபம்
Recommended Video
சென்னை: ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது தூத்துக்குடியில் மக்களின் உயிரை எடுக்க யார் அனுமதி கொடுத்தது என்று இயக்குனர் பாண்டிராஜ் கொந்தளித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமாரை வைத்து வள்ளிகாந்த் இயக்கியுள்ள செம படத்தை பாண்டிராஜ் எழுதி தயாரித்துள்ளார். செம படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடி பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோபம்
இந்த விழா நடத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைட் விஷயம் நடந்தது வேதனையாக உள்ளது. ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதி கொடுத்தது. அரசின் இந்த செயல் வருத்தம் அளிக்கிறது. தமிழகம் எங்கு செல்கிறது என்றே தெரியவலில்லை. கடவுளுக்கே வெளிச்சம் என்று நிகழ்ச்சியில் பேசிய பாண்டிராஜ் தெரிவித்தார்.
ஜிவி பிரகாஷ்
தூத்துக்குடி மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடத்தப்படும் போராட்டத்தில் உயிரை கொள்வது கேவலமான விஷயம். நியாயமாக போராடியபோது இப்படி செய்தது மனிதாபிமானம் இல்லாத செயல். இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இது காட்டுமிராண்டித்தனம் என்று ஜிவி பிரகாஷ் குமார் கொந்தளித்துள்ளார்.
|
கோபம்
சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரம் கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்... வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் #SterliteProtestMay22nd2018 #SterliteProtest என்று ஜிவி பிரகாஷ் தனது கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2018 |
உயிர்
சுவாசிக்க சுத்தமான காற்றை கேட்டு போராடியவர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.