Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதித்தது: பாண்டிராஜ், ஜிவி கோபம்
Recommended Video
சென்னை: ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது தூத்துக்குடியில் மக்களின் உயிரை எடுக்க யார் அனுமதி கொடுத்தது என்று இயக்குனர் பாண்டிராஜ் கொந்தளித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமாரை வைத்து வள்ளிகாந்த் இயக்கியுள்ள செம படத்தை பாண்டிராஜ் எழுதி தயாரித்துள்ளார். செம படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடி பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோபம்
இந்த விழா நடத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைட் விஷயம் நடந்தது வேதனையாக உள்ளது. ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதி கொடுத்தது. அரசின் இந்த செயல் வருத்தம் அளிக்கிறது. தமிழகம் எங்கு செல்கிறது என்றே தெரியவலில்லை. கடவுளுக்கே வெளிச்சம் என்று நிகழ்ச்சியில் பேசிய பாண்டிராஜ் தெரிவித்தார்.
ஜிவி பிரகாஷ்
தூத்துக்குடி மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடத்தப்படும் போராட்டத்தில் உயிரை கொள்வது கேவலமான விஷயம். நியாயமாக போராடியபோது இப்படி செய்தது மனிதாபிமானம் இல்லாத செயல். இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இது காட்டுமிராண்டித்தனம் என்று ஜிவி பிரகாஷ் குமார் கொந்தளித்துள்ளார்.
|
கோபம்
சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரம் கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்... வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் #SterliteProtestMay22nd2018 #SterliteProtest என்று ஜிவி பிரகாஷ் தனது கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2018 |
உயிர்
சுவாசிக்க சுத்தமான காற்றை கேட்டு போராடியவர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.