Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஓவியா அழகா இல்லையா? - பாண்டிராஜ் பதில்
இந்தப் படம் குறித்து நிருபர்கதளிடம் பேசினார் பாண்டிராஜ். அவர் கூறுகையில், "பசங்க புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படக் கம்பெனி தொடங்கி மெரினா படத்தை நானே தயாரிக்கிறேன். வெறும் ஒரு லட்சம் ரூபாயை வைத்துக் கொண்டு தயாரிப்பில் இறங்கி விட்டேன். திரை மறைவில் நிறைய பேர் உதவுகிறார்கள்.
மெரினா படத்தில் சிவகார்த்திகேயன், ஓவியா ஜோடியாக நடிக்கின்றனர். மெரினா கடற்கரையில் திரியும் சிறுவர்கள் பற்றிய கதை. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி முக்கியம் என்பதை படத்தில் வலியுறுத்தியுள்ளேன்.
பட்டினப்பாக்கத்தில் இருந்து காசிமேடு வரை கடற்கரை பகுதியில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். 'வணக்கம் வாழ வைக்கும் சென்னை' என்ற பாடலை வித்தியாசமாக எடுத்துள்ளோம். விக்ரம் பாடி கொடுத்தார். விமலை ரோட்டில் ஆட வைத்து எடுத்தோம். சசிகுமார், சினேகா போன்றோரும் ஆடியுள்ளனர்," என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "ஓவியா பொதுவாகவே மேக்கப் பிரியை. எப்போதும் மேக்கப் மயம்தான். என் படங்களின் ஹீரோயின்களுக்கு மேக்கப் போட விடவே மாட்டேன். ஆனால் இந்தப் படத்துக்காக விட்டுவிட்டேன்," என்றார். உடனே அவரிடம், அப்படியென்றால் ஓவியா அழகாக இல்லை என்கிறீர்களா? என்று கேட்க, பதறிப் போனார் பாண்டிராஜ்.
"இந்த வம்பே வேணாம். ஓவியா இயற்கையிலேயே அழகானவர்தான். பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். அவர்களுக்கு மேக்கப் அவசியமில்லை என்பதற்காக இதைச் சொன்னேன்," என்றார்.