Don't Miss!
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சாலையோரம் படத்தில் மீண்டும் வில்லனான பாண்டியராஜன்
சாலையோரம் படத்தில் மீண்டும் வில்லனாக நடித்துள்ளார் இயக்குநர் ஆர் பாண்டியராஜன்.
இயக்குனர் பி.வாசுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கே.மூர்த்தி கண்ணன், திரைக்கதை எழுதி இயக்கி வரும் படம் ‘சாலையோரம்'.
இப்படத்தில் ராஜ் கதாநாயகனாகவும், செரீனா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். சிங்கம் புலி, முத்துக்காளை, லொள்ளு சபா மனோகர், பாய்ஸ் ராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
மிஷ்கினின் அஞ்சாதே படத்துக்குப் பிறகு பாண்டியராஜன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
துப்புரவு தொழிலாளிக்கும் மருத்துவம் படிக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது இந்தப் படம். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில், தமிழக கவர்னர் ரோசையா கலந்துகொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டார்.
விழாவில் பேசிய பாண்டியராஜன் கூறுகையில், "மிஷ்கின் படத்தில் வில்லனாக நடிக்கும்போதே, இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்று கூறினேன். ஆனால், மிஷ்கினோ உங்களுக்கு வில்லன் கதாபாத்திரம் சரியாக வரும் என்று கூறினார். ஒரு இயக்குvரால் எந்த நடிகரையும் எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கவைக்க முடியும் என்பதற்கு அதுதான் சான்று," என்றார்.