Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பனி விழும் மலர் வனம்… புலிகளைக் காக்கும் படம்..
பனிவிழும் மலர் வனம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் ரஜின் மெலடி மெட்டுக்களைப் போட்டு அசத்தியுள்ளார்.
படத்திற்கான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் ரவி இந்திரன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப் படத்தினைப் பற்றியும், பாடல்களைப் பற்றியும் விழாவில் கலந்து கொண்ட பலரும் பாராட்டிப் பேசினர்
இயற்கை எழில் கொஞ்சும் அழகான இடத்தில் படமாக்கப்பட்டுள்ள பனிவிழும் மலர்வனம் திரைப்படம் இயற்கைதான் கதாநாயகன் என்பதை உணர்த்துகிறதாம்.
கேரளாவின் அழகு
இந்தியாவின் சொர்க்கம் என அழைக்கப்படும் கேரளாவில் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. குமுளி தேக்கடி போன்ற அழகான இடங்களை அப்படியே கேமராவில் அள்ளி வந்திருக்கிறார்களாம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
பூச்சி கடிச்சதாமே?
காடுகளில் உள்ள அட்டைப்பூச்சிகள், விஷ ஜந்துக்களின் கடிகளையும் பொருத்துக்கொண்டு இந்தப் படத்தில் நடித்துள்ளனர் கலைஞர்கள்.
காதலும் இயற்கையும்
காதலோடு, இயற்கையைப் பற்றியும், புலிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தப் படத்தில் கதையோடு இணைந்து கூறியுள்ளனராம்.
ஒரு நாயகன் 2 நாயகி
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்த அபிலாஷ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் நடித்த சானியா, பேராண்மை படத்தில் நடித்த வர்ஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
நகைச்சுவை நடிகர்
இயக்குநர் ஜெகன் ஜி மற்றும் நகைச்சுவை நடிகர் பாபா லட்சுமணன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
புலி ஒரு கதாபாத்திரம்
பனி விழும் மலர் வனம் படத்தில் ஒரு புலி நடித்துள்ளது. இது முக்கிய கதாபாத்திரமாக படம் முழுவதும் வருகிறது. இந்தப் புலி, தி ஹேங் ஓவர், பர்னிங் பிரைட், மற்றும் வி பாட் அ ஜு போன்ற படங்களில் நடித்திருக்கிறது.
இன்கிரிடிபில் இந்தியா
இந்த படம் இயற்கையை நேசிப்பவர்களுக்கு சிறந்த படமாக அமையும். இந்தப் படம் புலிகளைப் பாதுகாப்போம் என்ற வசனத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவும் அமைந்துள்ளதாம்.
மக்கள் தொடர்பு செல்வரகு
இந்த திரைப்படத்திற்கு இசை ரஜின். படத்தின் ஒளிப்பதிவு என்.ராகவ், எடிட்டிங் ரவி சங்கர். ஜேம்ஸ் டேவிட் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் மக்கள் தொடர்பாளர் பணியை எஸ். செல்வரகு செய்து வருகிறார். பனி விழும் மலர்வனம் தலைப்பினைப் போல ரசிகர்களின் நெஞ்சங்களில் குளிர்விக்கும் என்கின்றனர் படத்தின் தயாரிப்பாளர்கள்