Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பண்ணையாரும் பத்மினியும் புது இயக்குநரின் மகிழ்ச்சியும்!
பண்ணையாரும் பத்மினியும் தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியது. படமும் நன்றாக இருந்தது.
ஆனால் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகவில்லை படம். அந்தக் குறையைத் தீர்க்கும் விதமாக படத்துக்கு சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு கேரளாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே படம் என்ற பெருமை பண்ணையாரும் பத்மினியும் படத்துக்குக் கிடைத்துள்ளது.
இந்த தேர்வானது, படத்தின் இயக்குநர் அருண் குமாரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "வழக்கமா இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 10 படங்களைத் தேர்ந்தெடுப்பாங்க. இந்த முறை 7 படங்கள்தான் தேர்வாகியிருக்கு. அதுல ஒரே தமிழ்ப் படம் பண்ணையாரும் பத்மினியும்தான்னு நினைக்கும்போதே ரொம்ப பெருமையா இருக்கு. ஒரு படைப்பாளிக்கு தேவையானதே அங்கீகாரம்தானே. அது இப்ப தொடர்ந்து கிடைக்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஹாலிவுட் இயக்குநர்கள் பலரும் இந்தத் திரைப்பட விழாவுல கலந்துக்கப் போறாங்க... எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்," என்றார்.
அடுத்து ஆக்ஷன் படம் பண்ணுகிறார் அருண். அதிலும் ஹீரோ விஜய் சேதுபதிதானாம்!