Don't Miss!
- News பரம்பரை வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ்.. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பறிக்க முயற்சி! விடாத மோடி
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கத்தாரில் சைமா விருது வழங்கும் விழா - நான்கு மொழி திரை நட்சத்திரங்கள் பங்கேற்பு
தோகா: பாண்டலூன்ஸ் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் சைமா முதன்முறையாக கத்தாரில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய சினிமாவைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ஆகஸ்ட் 15 மற்றும் 16 அன்று இந்த விழா நடைபெறவுள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழியைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா, முதன்முறையாக கத்தாரில் நடைபெறவுள்ளது, இதில் இந்திய சினிமாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் அன்று இந்த விழா நடைபெறவுள்ளது.
பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள். ஒன் எஃப்எம் 89.6இல் தோஹாவில் இயங்கும் இந்நிகழ்ச்சி லுசெயில் உள்ளரங்க அரங்கில் நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் உள்ளூர் செய்தியாளர்களக்கு விவரங்கள் கூற செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பில், கியூ.என்.டி.சி மஷால் ஷாபிக், விஷ்ணு இந்தூரி, சைமா உரிமையாளர் நவீத் அப்துல்லா, ஒன் எஃப்.எம் கத்தார் தலைமை நிர்வாக அதிகாரி ஜாசிம் முகமது, ஒன் எஃப்.எம் கத்தார் சி.சி.ஓ டாக்டர். ஆர்.சீதாராமன் (தலைமை நிர்வாக அதிகாரி-தோஹா வங்கி), மேதத் கிரேஸ் (டெய்சீர் மோட்டார்ஸ் பொது மேலாளர்), பொது மேலாளர் வாசிம் தாகே ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய நடிகைகள் ஆண்ட்ரியா ஜெரோமியா மற்றும் மன்விதா ஹரிஷ் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். இதில் ஸ்பான்சர்களுடன் ஊடகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் விருந்தினர்களும் கலந்து கொண்டனர். திரு.விஷ்ணுவர்தன் இந்தூரி, சைமா 2019இல் கலந்து கொள்ளும் முக்கிய பிரபலங்களையும், விருந்தினர்களின் பட்டியலையும், குறும்பட வெற்றியாளர்களையும், சைமா 2019 இல் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சிகளை பற்றியும் கூறினார்.
நான்கு மொழி திரை பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தெலுங்கு மற்றும் கன்னட நிகழ்ச்சிகளும், ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று தமிழ் மற்றும் மலையாள நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
தற்போது, சைமா அதன் எட்டாவது ஆண்டில், அதிகம் விரும்பி பார்க்கப்படும் விருது நிகழ்ச்சியாகும், இது திறமையையும் சிறப்பையும் அங்கீகரிக்கிறது, அதே நேரத்தில் தென்னிந்திய சினிமாவை உலகளாவிய எல்லைகளில் கொண்டு சென்று தென்னிந்திய நடிகர்களுக்கு சர்வதேச ரசிகர்களையும் ஏற்படுத்தித் தரும் ஒரு தளத்தை உருவாக்குகிறது.
திரைப்பட விருதுகள் தவிர, தென்னிந்திய வர்த்தக சாதனையாளர்களை பாராட்டும் வணிக விருது வழங்கும் விழா, ஆகஸ்ட் 14ஆம் தேதி தோஹாவிலுள்ள சொகுசு ஹோட்டலான மாண்ட்ரியன் (Mondrian Doha) தோஹாவில் நடைபெறும். இந்த கத்தார் விழா முக்கிய நபர்கள் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார பங்களிப்பாளர்களை பாராட்ட நடைபெறுகிறது. பிரபலங்கள் மற்றும் உயர் தொழில் வல்லுநர்களால் விருதுகள் இவர்களுக்கு வழங்கப்படும்.