Don't Miss!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பாபநாசம் சிக்கல் தீர்ந்தது.. 600 அரங்குகளில் வெளியாகிறது!
விநியோகஸ்தர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் பாபநாசம் படம் திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது.
கமல்-கவுதமி நடித்துள்ள பாபநாசம் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு ‘யு' சான்று பெற்றது. இப்படத்தை அடுத்த ஜூலை 3-ந்தேதி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன.
ஆனால் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பால் திரையரங்குகளில் திட்டமிட்டபடி டிக்கெட் முன்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. உத்தம வில்லன் ரிலீசின் போது செய்து கொண்ட ஒப்பந்தப்படி கமல் லிங்குசாமிக்கு படம் பண்ணாமல், சொந்தபப் படம் தயாரிப்பதால் தங்கள் வரவேண்டிய பணம் வராமல் போவதாகக் குற்றம்சாட்டினர் விநியோகஸ்தர்கள். எனவே பாபநாசத்துக்கு ஒத்துழைப்பு இல்லை என அறிவித்தனர்.
இதையடுத்து விநியோகஸ்தர்களுக்கும் கமல் தரப்பினருக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பாபநாசம் பட சிக்கல் தீர்ந்து திட்டமிட்டப்படி 3-ந்தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
இந்த படத்தை வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் சுரேஷ்பாலாஜி, ஜார்ஜ் பயஸ் மற்றும் ராஜ்குமார், தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.